search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி கணக்கில் பணம் அபேஸ்"

    போச்சம்பள்ளியில் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (69) இவரது இளைய மகன் சோமசுந்தம் உடல் நலமில்லாமல் கடந்த 11,07.2018 அன்று உயிரிழந்தார். அவரது பெயரில் சேமித்து வைத்திருந்த எல்.ஐ.சி. பணம் ரூ. 2 லட்சத்தை போச்சம்பள்ளியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் சீனிவாசன் வரவு வைத்திருந்தார்.

    கடந்த வாரம் செலவுக்காக பணம் எடுக்க சென்றபோது, அவரது கணக்கில் பணம் இல்லாதது கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கணக்கில் இருந்த மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது உங்களது ஏ.டி.எம். கார்டு மூலம் மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் எப்.ஐ.ஆர். இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது என கைவிரித்து விட்டார். 

    இதையடுத்து, போச்சம்பள்ளி போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். அப்போது இது சைபர் கிரைம் சம்பந்தப்பட்டது என்று கூறி போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சீனிவாசன் தவித்து வருகிறார்.
    ×